இனப்படுகொலைகள் தொடர்பான கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்க வாய்ப்பு!

ஈழத்தில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலைகள் தொடர்பான கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்க வாய்ப்பு!

ஈழத்தில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற கனடாவின் பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவின் தலைவருமான சரத்வீரசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனவே கனடாவின் அரசியல் நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் சரத்வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முப்படையின் தலைமை அதிகாரிகள் புலனாய்வு பிரிவுகளின் பிரதான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஆதாரங்கள் அற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா விதித்துள்ள பயணத்தடைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.