சுவரொட்டிகளிலும், பாதைகளிலும் எனது புகைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி அறிவுறுத்தல்!

சுவரொட்டிகளிலும், பாதைகளிலும் தமது புகைப்படத்தை, காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

சுவரொட்டிகளிலும், பாதைகளிலும் எனது  புகைப்படத்தை  காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி அறிவுறுத்தல்!

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 149ஆவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று (08) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் கோஷங்களில் இருந்து விலகி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட்டாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

,10ஆண்டு திட்டத்தில் கிழக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக பலப்படுத்தப்படும் எனவும், அபிவிருத்தி திட்டங்களின் போது முன்னதாக விடுபட்ட மகாவலி ஏ மற்றும் பீ வலயங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறித்த நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நிலாவெளியில் இருந்து பானம வரை, விரிவான சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.