மணிப்பூரில் வன்முறை - பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் பலி!

இந்திய மணிப்பூரில் நடந்த புதிய வன்முறையில் ஒரு பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை - பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் பலி!

இந்திய மணிப்பூரில் நடந்த புதிய வன்முறையில் ஒரு பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

கோகன் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் நடத்திய இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்ததாக இராணுவ தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் நடத்தியவர்கள், இராணுவம் பயன்படுத்திய வாகனங்களைப் போன்ற வாகனங்களில் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், மேலும் இரண்டு மாவட்டங்களில் இருந்து வீடுகளுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேவேளை கடந்த ஒரு மாத காலமாக மணிப்பூரில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் பலர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.