பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுப்பு!

பிலிப்பைன்ஸில் இன்று(02) 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை  எச்சரிக்கை விடுப்பு!

இதேவேளை, பங்களாதேஷில் இன்று காலை நில நடுக்கமொன்று உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

அத்துடன், நில நடுக்கத்தினால் இதுவரையில் எந்தவித சேதங்களும் பதிவாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.