சட்ட மா அதிபரின் சேவை நீடிப்பு - ஜனாதிபதி அதிரடி!

சட்ட மா அதிபரின் சேவை நீடிப்பு - ஜனாதிபதி அதிரடி!

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

சட்ட மா அதிபரின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது .அதேசமயம் ஏற்கனவே அவருக்காக ஜனாதிபதி மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசியலமைப்பு சபை நாளை விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது.

இந்த பின்னணியிலேயே அரசியலமைப்பு சபையின் முடிவை புறந்தள்ளி ஜனாதிபதி ரணில், சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக அரசியலமைப்பு சபைக்கு 8 பக்கங்களை கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய ஜனாதிபதி ரணில், அரசியலமைப்புச் சபையின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.