மண்சரிவு அபாய எச்சரிக்கை 10 மாவட்டங்களுக்கு மேலும் நீடிப்பு!

அசாதாரண காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பண்டாரவளை நகரின் தாழ்வான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.