பாகிஸ்தான் வீரருக்கு எதிராக “ஜெய் ஸ்ரீராம்” கோஷமிட்ட ரசிகர்கள்!

2023 - உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

குறித்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேறிய போது, ரசிகர்கள் சிலர் அவரை நோக்கி “ஜெய் ஸ்ரீராம்” என கோஷமிட்டனர்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.

மொஹமட் ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் செய்த குறித்த செயலுக்கு பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.