வெளிநாடுவாழ் கிரிக்கெட் வீரர்களிடம் திலகரட்ன தில்ஷான் கனிவான வேண்டுகோள்!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கி பயிற்சியளித்து முறையான வாய்ப்புகளை வழங்கினால் இலங்கை கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

பெரும் பேசுபொருளாக மாறியுள்ள இலங்கையின் கிரிக்கெட் துறை வீழ்ச்சி குறித்து அனைவரும் நம்பிக்கையிழந்துள்ளனர்.

எதிர்காலத்தில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டு முறையாக கிரிக்கெட் துறையை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் எனவும் திலகரட்ன தில்ஷான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் வாழ்கின்ற எமது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தாமாக முன்வந்து கிரிக்கெட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த காரியத்தில் நானும் தயாராக இருக்கின்றேன். இலங்கை கிரிக்கெட் துறையை கட்டியெழுப்புவதற்கு என்னாலான உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன்.

முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்கவுக்கு வாழ்த்துக்களை கூறும் அதேநேரம் அவர் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டை கட்டியெழுப்புவார் என்று நம்புகிறேன்” என்றும் திலகரட்ன தில்ஷான் குறிப்பிட்டார்.