ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ஐ.சி.சி போட்டிகளில் பங்கேற்க தடை! (காரணம் வெளியானது)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் ஐ.சி.சி போட்டிகளில் பங்கேற்க தடை! (காரணம் வெளியானது)

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று கூடிய நிலையில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று (10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

காரணம் இதுதான் >>>>

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும்.

ஆனால் அதை இலங்கை அரசாங்கம் மீறி ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையை கலைத்து அதன் உள் விவகாரத்தில் தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளது.

மேலும் ”இலங்கை அரசாங்கத்தினுடைய தலையீடுகள் இல்லாமல் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும்” என்றும் ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை

குறிப்பாக, இலங்கையில் கிரிக்கெட் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும் மற்றும் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநீக்கத்தின் நிபந்தனைகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிரிக்கெட் நிறுவனத்திற்குள் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

சமகால நிர்வாக சபையை முழுமையாக கலைத்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்  >>>

தொடர் தோல்விகள் - இலங்கை அணியின் எதிர்காலம் என்ன? சிறப்புப் பார்வை