கொக்குதொடுவாய் மனித புதைக்குழியிலிருந்து எச்சங்கள் வெளியில் எடுக்கப்படவில்லை!

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைக்குழியானது மூன்றாம் கட்டத்தில் ஐந்தாம் நாள் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு மதியம் வரை பணிகள் இடம்பெற்றன.

இவ்வேளையில், இலங்கைக்கான மனித உரிமை ஆணையாளர் காரியத்தில் இருந்து அதிகாரி ஒருவர் நேரடியாக வந்து மனித புதைகுழியை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, ஐந்தாம் நாள் அகழ்வுபணியை தான் நேரடியாக பார்வையிடுவதாக கூறியுள்ளார்.

மூன்றாம் கட்ட அகழ்வின் போது இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் குறித்த மனித எலும்புக்கூடுகள் இன்னும் மேலே எடுக்கவில்லை.

கடந்த ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழ்வின் மனித எலும்புக்கூடுகள் விரைவாக மேலே எடுக்கப்படும் என்று அகழ்வு பணியில் ஈடுபட்டு இருக்கும் வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

யூடியானா செல்றின் அகிலன் என்னும் அதிகாரியே மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து பங்குபற்றிய பெண் ஆவார்.