இரத்தினபுரியில் துப்பாக்கி பிரயோகம் l ஒருவர் உயிரிழப்பு!

இரத்தினபுரியில் துப்பாக்கி பிரயோகம் l ஒருவர் உயிரிழப்பு!

இரத்தினபுரி - கொலன்ன – கேல்ல பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்று [09] இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கேல்ல இறக்குவானை பிரதான வீதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

தேயிலை தோட்ட உரிமையாளரான 61 வயதுடைய நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலன்ன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.