வாழைச்சேனையில் ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் குடும்பஸ்தர் கைது!

வாழைச்சேனையில் ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் குடும்பஸ்தர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுறியா நகரில் இரண்டு ரீ 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் 43 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் செவ்வாய்கிழமை 9 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலன்னறுவை அரலகங்வில விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலன்னறுவ இராணுவப் புலனாய்வுப்பிரிவு ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ரீ 56 ரக இரு துப்பாக்கி உட்பட வாள் 1, பைனோ 1, துப்பாக்கி ரவைகள் 60, மெகசீன் 2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க்க செயற்பாட்டில் ஈடுபாடு கொண்ட குறித்த நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.