அத்துமீறி நுழைய முற்பட்டு கைதான நால்வர் விடுவிப்பு!

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துமீறி நுழைய முற்பட்டு கைதான நால்வர் விடுவிப்பு!

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நால்வரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுவிட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (04) போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.