கட்டணமில்லா சிறப்பு ரயில் சேவை இன்று முதல்!

கட்டணமில்லா சிறப்பு ரயில் சேவை இன்று முதல்!

பொசன் போயாவை முன்னிட்டு இன்று (17) முதல் மிஹிந்தலைக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் விசேட ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டணமில்லா சிறப்பு ரயில்கள் அனுராதபுரம் - மிஹிந்தலை இடையே சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து மஹவ நோக்கி ரயிலில் வரும் பயணிகளுக்காக மஹவ ரயில் நிலையத்தில் இருந்து அனுராதபுரம் வரை விசேட பேருந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வடக்கு ரயில் மார்க்கத்தில் மஹவ மற்றும் அநுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புனரமைப்புப் பணிகள் நிறைவடையாததால், இவ்வருடம் பொசன் போயாவுக்கு ரயில்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையில் 400 மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.