3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் அரச பாடசாலையை அண்மித்த பகுதியில் நேற்று (21) மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேன், முச்சக்கரவண்டி,  மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ் விபத்தில் துரைசாமி லலிதராசா என்பவரே உயிரிழந்தவராவர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.