எரிபொருள் விலையை 500 சதவீதத்தால் உயர்த்த தீர்மானம் - கியூபா

எரிபொருள் விலையை 500 சதவீதத்தால் உயர்த்த தீர்மானம் - கியூபா

கியூபா அரசாங்கம் எரிபொருள் விலையை 500 சதவீதத்தால் உயர்த்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், எரிபொருள் விலைக்கு மேலதிகமாக மின்சாரக் கட்டணமும் 25 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1990ஆம் ஆண்டுக்குப் பிறகு கியூபா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.