பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு!

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு!

பொலிஸாருக்கு எதிராக இரண்டு யுவதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று [19] விசாரணை செய்யாமலேயே நிராகரித்து தீர்ப்பளித்தது.

2022 செப்டம்பர் 22 ஆம் திகதி லிப்டன் சந்தியில் சோசலிச மாணவர் ஒன்றியம் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மெலனி பிரேமசிங்க மற்றும் திலீப தரங்க ஆகிய இரு யுவதிகளை பொலிஸ் அதிகாரிகள் தன்னிச்சையாக இழுத்துச் சென்று கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இவர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள்  உயர் நீதிமன்றினால் இன்று நிராகரிக்கப்பட்டது.