போலி அழைப்பிதழ் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை

கண்டியில் நடைபெறும் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ நிகழ்விற்கான போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள திணைக்களம், அரசாங்கம் அத்தகையை எந்த அழைப்பையும் வெளியிடவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் அழைப்பிதழ், இன்று கண்டியில் நடைபெறும் ஸ்ரீ தலதா வழிபாடுவில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.
கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான சிறப்பு கண்காட்சியான ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ இன்று தொடங்கும் நேரத்தில் இந்த போலி அழைப்பிதழ் பரப்பப்பட்டுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் இந்தக் கண்காட்சி, 2025 ஏப்ரல் 18-27 வரை 10 நாட்களுக்கு நடத்தப்படும்.