யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஒன்று இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!

கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து எதிர்வரும் 3ம் திகதி வரையில் இந்த கண்காட்சியை நடத்துகின்றன.

இந்த கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது, தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்தார்.

வட மாகாணம் பெரும் நிலப்பரப்பை கொண்டிருந்த போதும், மொத்த தேசிய உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவில்லை என்று வர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதனை அதிகரிப்பதற்கான தெளிவுப்படுத்தல்களை இந்த கண்காட்சியின் ஊடாக வழங்குவதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.