தொடரும் அடைமழை காலநிலை - இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இலங்கைத்தீவில் இன்றும் பல பகுதிகளில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தொடரும் அடைமழை காலநிலை -  இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிக அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.