மாவீரர் நினைவேந்தல் - கைதான 7 பேரும் தடுத்து வைத்து விசாரணை!

மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்டமை தொடர்பில் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேரும் 72 மணிநேரம் பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

மாவீரர் நினைவேந்தல் - கைதான 7 பேரும் தடுத்து வைத்து விசாரணை!

மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லத்தினை அலங்கரித்த கொடிகள், கம்பங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சென்ற நான்கு பேர் நேற்று முன்தினம் தரவை பகுதியில் வைத்து வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சுடர் ஏற்றிய இருவர் உட்பட மூன்று பேரை வவுணத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த 7 பேரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.