விடுதலைப் புலிகள் இயக்க சின்னத்தை அணிந்து வந்தவர் விளக்கமறியலில்!

கொடிகாமம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் மற்றும் தேசியத் தலைவரின் உருவப்படம் பொறித்த மேலாடையை அணிந்து, மாவீரர் தினத்தில் பங்கேற்ற போது கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்க சின்னத்தை அணிந்து வந்தவர் விளக்கமறியலில்!

கொடிகாமம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் மற்றும் தேசியத் தலைவரின் உருவப்படம் பொறித்த மேலாடையை அணிந்து, மாவீரர் தினத்தில் பங்கேற்ற போது கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (29) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த இளைஞரை டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த குறித்த 27 வயதுடைய இளைஞர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டார்.