வளி மாசடைவு காரணமாக இன்றைய போட்டி தடைப்படும் சாத்தியம்!

டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் வளி மாசடைவு காரணமாக, இன்றைய உலகக் கிண்ண போட்டியை நடத்துவது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளி மாசடைவு காரணமாக   இன்றைய போட்டி தடைப்படும் சாத்தியம்!

டெல்லியில் வளி தூய்மை தரச் சுட்டெண் கடந்த சில நாட்களில் 400 புள்ளிகளை தாண்டியதால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள், தங்களது பயிற்சி செயற்பாடுகளையும் கைவிட்டிருந்தன.

2017 ஆம் ஆண்டில், இலங்கை அணி டெல்லியில் டெஸ்ட் போட்டியொன்றில் பங்கேற்றிருந்தபோது, நிலவிய வளி மாசடைவு காரணமாக வீரர்கள் முகக் கவசம் அணிந்து விளையாடியிருந்தனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 38 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

டெல்லியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 02 அணிகளும் ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் 4 முறை மோதியுள்ளன.

இதில் இலங்கை அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.