உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழு - விளையாட்டுத்துறை அமைச்சர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழுவை நியமிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழு - விளையாட்டுத்துறை அமைச்சர்!

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய விளையாட்டுப் பேரவைக்கான புதிய உறுப்பினர்களை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பெயரிட்டுள்ளார்.

15 பேரை கொண்ட இந்த பேரவையின் தலைவராக மையா குணசேகர பெயரிடப்பட்டுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர் சிதத் வெத்தமுனி, பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, சட்டத்தரணி பண்டுக கீர்த்திநந்த உள்ளிட்டவர்களும் அதில் அடங்குகின்றனர். 

முன்னதாக தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் அர்ஜூன ரணதுங்க செயற்பட்டிருந்தார்.