கல்லுண்டாய் விபத்து செய்தி உண்மைக்கு புறம்பானது - செய்தியாளர் உறுதி!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

கல்லுண்டாய் விபத்து செய்தி உண்மைக்கு புறம்பானது - செய்தியாளர் உறுதி!

"யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்” யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை உள்ளிட்ட சில இணையத்தள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. 

குறித்த செய்தி தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார், யாழ். போதனா வைத்தியசாலை உள்ளிட்ட தரப்பினரிடம் வினவிய போது, அவ்வாறான விபத்து சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இவ்வாறான செய்தியினை எவரேனும் உள்நோக்கம் கருதி வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.