சிறுமியுடன் அவதூறாக நடக்க முயன்ற ஆண் கொலை விவகாரம்: கைதான 6 பேரும் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 6 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியுடன் அவதூறாக நடக்க முயன்ற ஆண் கொலை விவகாரம்: கைதான 6 பேரும் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 6 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த வழக்கு யாழ் நீதிவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.

கொலை தொடர்பில் 6 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர், கோப்பாய் பகுதியில் உள்ள சிறுமி ஒருவருடன் தவறான விதத்தில் நடத்துக்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அவரை சிலர் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.