கொஸ்லந்தை தொடக்கம் பூனாகலை வரையான பாதை முறையாக சீரமைக்குமாறு கோரிக்கை!

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பிரதேச சபைக்கு உட்பட்ட கொஸ்லந்தை தொடக்கம் பூனாகலை வரையான இந்த பாதை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கொஸ்லந்தை தொடக்கம் பூனாகலை வரையான பாதை முறையாக சீரமைக்குமாறு கோரிக்கை!

இந்த பாதை முன்னர் மக்கள் பாவனைக்கு ஏற்றாற் போல மிகவும் சீரான முறையில் இருந்தது. 

நன்றாக இருந்த இந்த பாதையை அபிவிருத்தி எனும் பெயரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மதிப்பீட்டு தொகை 423,498,013.70 ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டம் 11Km தூரத்தை கொண்டதாக இருந்தாலும் 4Km தூரமே வேலை திட்டம் நடைபெற்றுள்ளது.

மிகுதி 7 Km தூர பாதையை இயந்திரங்கள் கொண்டு பாதையை சீர்குலைத்து வேலைத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த பாதை முற்று முழுதாக சேதமடைந்து உள்ளது.

பாடசாலை செல்லும் மாணவர்கள் பாதையை சீர் செய்து பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த பாதையை அடிகள் நாட்டி ஆரப்பித்து வைத்த அரசியல்வாதிகள் சற்று கவணம் செலுத்தி இப்பாதையை சீரமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.