மூத்த ஊடகவியலாளர் அசோக திலகரத்ன காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் அசோக திலகரத்ன காலமானார்!

மூத்த ஊடகவியலாளர் அசோக திலகரத்ன காலமானார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்  உயிரிழந்ததாக  அவரது  குடும்பத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

கொழும்பு நாலந்தா கல்லூரியில்  கல்வி கற்ற  அவர்,  1967 இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இணைந்தார்.

நீண்ட காலம் ஊடகவியலாளராகப் பணியாற்றிய அவர், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வழங்கிய மூத்த ஊடகவியலாளராவார்.