வெயில் காலத்தில் வீடொன்றின் மீது வீழ்ந்த பனிக்கட்டியால் சர்ச்சை!

வெயில் காலத்தில் வீடொன்றின் மீது வீழ்ந்த பனிக்கட்டியால் சர்ச்சை!

பதுளை - ஹாலி-எல காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரெல்போல - மொரகல பகுதியில் வீடொன்றின் மீது பனிக்கட்டி ஒன்று வீழ்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 5 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பனிக் கட்டி ஒன்றே இவ்வாறு வீட்டின் மீது வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் குறித்த பகுதியில் மழையுடனான வானிலை எதுவும் நிலவவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.