உணவு விசமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்!  

 உணவு விசமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில்!  

நமுனுகுல - கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்  உணவு விசமானதில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த மாணவர்கள் இன்று காலை திடீரென சுகவீனமடைந்த நிலையில், பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு முதல் ஐந்தாம் தரங்களுக்கு இடைப்பட்ட வகுப்புகளில் கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்

அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 மாணவிகளும்  6 மாணவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உணவு விசமானமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.