மலையக ரயில் பாதையில் மண்சரிவு - ஒருவழி போக்குவரத்து நிறுத்தம்!

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் இன்றிரவு (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மலையக ரயில் பாதையில் மண்சரிவு - ஒருவழி போக்குவரத்து நிறுத்தம்!

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் இன்றிரவு (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படும் இரவு அஞ்சல் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றிரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.