கொலைசெய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியை

கொலைசெய்யப்பட்ட  இலங்கையர்களின் இறுதிக் கிரியை

கனடாவின் ஒட்டாவாவில் கொலைசெய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது.

ஒட்டாவாவில் இலங்கை நேரப்படி இரவு 10.30 க்கு இறுதிச் சடங்கு ஆரம்பமானது.

அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் திறந்தவெளியில் குறித்த பொது அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கனேடிய தலைநகர் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் பகுதியில் கடந்த 6 ஆம் திகதி 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.

19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்டு 10 நாட்களுக்குப் பின்னர் நேற்று ஒட்டாவாவில் உள்ள மாநாட்டு மண்டபமொன்றில் 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியை இடம்பெற்றது.