குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' குழுவின் தலைவர் கைது!

யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' குழுவின் தலைவர் கைதாகியுள்ளார்.

வலான மோசடி தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் தளத்தில் தங்கியிருந்த போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வெளிநாட்டொன்றுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் குறித்த பகுதியில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.