மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு - ஒருவர் காயம்

மகியங்கனை பகுதியில் மின்னல் தாக்கி 10 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி  சிறுவன்  உயிரிழப்பு - ஒருவர் காயம்

மகியங்கனை பகுதியில் மின்னல் தாக்கி 10 வயதான சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மகியங்கனை - நவமெதகம - தெஹியத்தகண்டி பகுதியில் பதிவாகியுள்ளது.

10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயதான சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மூத்த சகோதரன் உயிரிழந்தார்.

ஆறு வயது சிறுவன் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.