சமையல் எரிவாயுவின் விலை குறித்து லிட்ரோவின் தீர்மானம்!

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயுவின் விலையை  அதிகரிக்கப் போவதில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை குறித்து லிட்ரோவின் தீர்மானம்!

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயுவின் விலையை  அதிகரிக்கப் போவதில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பரிவர்த்தனைகளை கருத்திற் கொண்டு உள்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும். 

ஆனால் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு Litro Gas நிறுவனம் இந்த மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளது.

அதாவது, இந்த மாதம் 12.5 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 3,565 என (விலை - கொழும்பு மாவட்டத்துடன் தொடர்புடையது) எனப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.