உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7 மணிக்கு 13,759 வாக்குச் சாவடிகளில் ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது
அதன்படி இந்த முறை, 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 75,589 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், இதில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன
அதன்படி, இந்தத் தேர்தலில் 8,287 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வாக்குப் பெட்டிகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் விரைவில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.