சாந்தனின் உடலை இலங்கைக்கு எடுத்து செல்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

சாந்தனின் உடலை இலங்கைக்கு எடுத்து செல்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு எடுத்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

அவர் இலங்கை செல்ல மத்திய அரசு கடந்த 24-ஆம் திகதி அனுமதியளித்த நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில் திடீரென்று நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சாந்தன் உயிரிழந்தார்.

அவரின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதாக தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது. 

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு சாந்தனை கடந்த 27-ஆம் திகதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ்.இ ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல், சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான தூதரக அனுமதி, ஆவணங்கள் அனைத்து உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.