ரயில் பெட்டிகளின் மின்விசிறிகள் திருட்டு - ஊழியர் கைது!

ரயில் பெட்டிகளின் மின்விசிறிகள் திருட்டு - ஊழியர் கைது!

மாளிகாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருட முயன்ற  ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால்  மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த  சந்தேக நபர் மின் விசிறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சந்தேகநபர் நீண்ட  காலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்ட‎கொடை காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.