அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒரு நாள் பணி நிறுத்த போராட்டம்?

அனைத்து அரச நிறுவனங்களிலும் எதிர்வரும் 12ஆம் திகதி ஒரு நாள் பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவையாளர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒரு நாள் பணி நிறுத்த போராட்டம்?

அனைத்து அரச நிறுவனங்களிலும் எதிர்வரும் 12ஆம் திகதி ஒரு நாள் பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவையாளர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று [03] இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மற்றும் மாகாண அரச சேவையாளர் சங்கங்களினது கூட்டமைப்பின் தலைவர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 10,000 ரூபாய் கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.