சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் ஜனவரி 16 நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 16ஆம் திகதி அன்று நாடளாவிய ரீதியில் மருத்துவர் அல்லாத ஊழியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

சுகாதாரத் துறை  தொழிற்சங்கங்கள் ஜனவரி 16  நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

தொழிற்சங்கத் தலைமையின் கூற்றுப்படி, இந்த மாபெரும் பணிப்புறக்கணிப்பு, சுகாதாரத் துறையில் உள்ள 27 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து உதவித்தொகையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு அதிருப்தியை வெளிப்படுத்துவதே இந்த பணிப்புறக்கணிப்பின் முதன்மை நோக்கமாகும்.

அதேநேரம், தங்களுக்கும் இடையூறு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென மருத்துவர் அல்லாத ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

முன்னதாக துணை மருத்துவ மற்றும் துணை சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கள் காரணமாக மருத்துவமனை சேவைகளில் கடந்த வாரம் இடையூறுகள் எதிர்நோக்கப்பட்டன.