பாடசாலை மாணவனால்   ஆசிரியர்  மீது தாக்குதல்! 

பாடசாலை மாணவனால்   ஆசிரியர்  மீது தாக்குதல்! 

பாடசாலை மாணவன் உள்ளிட்ட மேலும் சிலரால் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக கல்நேவ தேசிய பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்நேவ தேசிய பாடசாலையின் இரண்டு மாணவர்களுக்கு இடையில் துடுப்பாட்ட மட்டை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலையில் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் ஒருவரை தாக்கியுள்ளார்.
 
இதன்பின்னர், குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராயும் நோக்கில் விளையாட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் அடங்கலாக இரண்டு பேர் மாணவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, வீட்டில் இருந்த பாடசாலை மாணவன் ஒருவர் உள்ளிட்ட தரப்பினர் இரு ஆசிரியர்களையும் தாக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.