கனடாவில் இலங்கையர்கள் 6 பேர் சுட்டுக்கொலை!

கனேடிய தலைநகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் என ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஏழாவது நபர் தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்கள் கனேடிய பிரஜைகள் அல்லாத இலங்கை பிரஜைகளின் குடும்பம் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

தந்தை உயிர் பிழைத்ததாகவும், ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறிய உயர் ஸ்தானிகர், அவர் நாட்டின் தலைநகரான கொழும்பில் உள்ள உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

கனேடிய அதிகாரிகள் இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்களின் வயது அல்லது மருத்துவமனையில் உள்ள நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை.