ஜாஎல - தண்டுகம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்!

ஜாஎல - தண்டுகம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்!

ஜாஎல, தண்டுகம, மஸ்வத்த பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

நேற்றிரவு 7.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

சந்தேகநபர்கள் வீட்டை விட்டு வெளியே வருமாறு தொலைபேசியில் குறித்த நபரை (48 வயது) அழைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் சம்பவத்தையடுத்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்தவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.