50 ரூபாயாக அதிகரிக்கப்பட்ட புறக்கோட்டை மலசலகூட கட்டணம் - மீண்டும் குறைப்பு!

50 ரூபாயாக அதிகரிக்கப்பட்ட புறக்கோட்டை மலசலகூட கட்டணம் - மீண்டும் குறைப்பு!

புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பிரதான மலசலகூடத்தில் அறவிடப்பட்ட கட்டணம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

அங்கு அறவிடப்படும் கட்டணம் சில தினங்களுக்கு முன்னர் 20 தொடக்கம் 40 ரூபாயாக இருந்த நிலையில் திடீரென 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தது. 

அதனை பயன்படுத்தும் மக்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். 

இந்தநிலையில் அங்குள்ள மலசலக்கூடத்தில் அறவிடப்படும் கட்டணத்தை குறைக்குமாறு அதனை குத்தகைக்கு பெற்றுள்ள தனியார் நிறுவனத்துக்கு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எழுத்து மூலம் அறியப்படுத்தியுள்ளது.