நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ நடந்த பிரேம்ஜியின் திருமணம்!

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ நடந்த பிரேம்ஜியின் திருமணம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் என்று பத்திரிக்கை  செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்தநிலையில் இன்று அவருக்கு திருமணம் நிறைவடைந்த நிலையில், அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும் ரசிகர்கள் மத்தியிலும் இணையத்திலும் பகிரப்பட்டு வருகின்றன.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பிரேம்ஜி. 

காமெடி நடிகர், இசையமைப்பாளர் பாடகர் என பன்முக திறமை கொண்ட இவர், சிம்பு இயக்கத்தில் வெளியான வல்லவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். 

கடந்த ஆண்டு வெளியான சத்திய சோதனை உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ள பிரேம்ஜி, ‘’என்ன கொடுமை சார் இது’’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தார்.  இதன் மூலம் பிரேம்ஜிக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

இந்நிலையில், 40 வயதை கடந்த பிரேம்ஜி எப்போது திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இது காதல் திருமணம் என்றும் தகவல் வெளியானது. 

அதன்படி சமீபத்தில் அவரின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

அதில் ஜூன் 9-ந் திகதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதனிடையே தற்போது பிரேம்ஜி அமரனின் திருமண மற்றும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரேம்ஜியின் அண்ணனும், இயக்குனருமான வெங்கட் பிரபு தம்பிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.