1,004 சிறைக்கைதிகள் நாளை விடுதலை!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறு குற்றங்களைப் புரிந்த 1,004 சிறைக்கைதிகள் நாளை விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளனர்.

1,004 சிறைக்கைதிகள் நாளை  விடுதலை!

நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்களுக்கும், 15 பெண்களுக்கும் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் காமினி பி. செனரத் தெரிவித்தார்.

இதன்படி, சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் அபராதம் செலுத்த தவறியமையினால் சிறையில் உள்ள கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.