பொதுமக்கள் ஜனநாயக போராட்டத்திற்கு காடையர்களின் அச்சுறுத்தல் - ஐ.நா.வில் முழங்கும் தமிழ் ஆர்வலர்கள் (விரிவான காணொளி)

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக மேற்கொள்ள முயற்சித்த போராட்டங்களின் மீது இலங்கை பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு தடுக்க முயற்சித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதன்போது எடுத்துரைத்தார்.

தாக்குதலுக்கு உள்ளான பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தேவியம்மா ஆகியோரும் தமது ஆதங்கங்களை இதன்போது முன்வைத்தனர்.