ஈரானிய துருப்புகள் கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நிச்சயம் - ஈரான் ஜனாதிபதி

ஈரானிய துருப்புகள்  கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நிச்சயம் - ஈரான் ஜனாதிபதி

ஈரானிய துருப்புகள் ஐந்து பேர் சிரியாவின் தலைநகரில் நேற்று கொல்லப்பட்டமைக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்ஸி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் உயிரிழந்த துருப்புகளுக்கு இரங்கலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவு அமைச்சகமும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நேற்று சிரியாவின் தலைநகரில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் தென்மேற்கு டமாஸ்கஸ், இராணுவ விமான நிலையம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.