பயிர்ச்சேதம் மற்றும் நட்டத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்!

விவசாயப் பயிர்ச்சேதம் மற்றும் நட்டங்களை எதிர்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பயிர்ச்சேதம் மற்றும் நட்டத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்!

நாட்டில் உள்ள சுமார் 65 ஆயிரம் விவசாயிகளுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு ஹெக்டயருக்கு ஒரு இலட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாத இறுதியில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.