குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி!

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 
 
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ கிராம் அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 
மேலும் ஏப்ரல் மாதத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோ கிராம் அரிசியும், எஞ்சிய 10 கிலோ கிராம் அரிசி மே மாத முதல் வாரத்திற்குள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.